Saturday, November 25, 2017

மூவேந்தர் யார்? பகுதி-32

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

பதினெட்டு மேளம் :
வெள்ளையானை, வெண்வட்டக் குடை, தேர், பதினாறு கால் பந்தல் போன்று, பதினெட்டு மேள வாத்தியங்கள் தேவேந்திர குலத்தாருக்கு (மள்ளர் - பள்ளர்) பாண்டியன் உக்கிரப் பெருவழுதியால் வழங்கப்பட்டதாகக் கரிவலம்வந்த நல்லூர் (ARE 432 / 1914), சீவிலிபுத்தூர் (ARE 588 / 1926) கல்வெட்டுகள் கூறுவதை ஏற்கனவே கண்டோம். பதினெட்டு மேள வாத்தியங்கள் தெய்வத்திற்கும், மன்னர்க்கும், அவர்தம் மரபினர்க்கும் உரித்தாய் இருந்து வந்துள்ளது. மன்னர் இதை நடைமுறைப் படுத்தி வந்தனர் என்பது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சீதனக் குறிப்பால் அறியத் தக்கதாகும்.
அக்குறிப்பாவது :
“திருமலை அய்யன், கெளரி அய்யன் அவர்கள் (திருமலை நாயக்கன்) நாளையில் ஸ்தலம் பிரபலமாகி உற்சவங்களும் உண்டு பண்ணிவச்சதின்பேரில் ........ பட்டத்து யானையின் பேரில் அவுதா, அம்பாரி, தங்கத்தினால் அலங்காரம் பண்ணியிருக்கிற ஆணையின் பேரில் ஏறிக்கொண்டு, எழுபத்திரண்டு பாளையப்பட்டு துரைகளும் அவரவர் விருதுகளுடன் ஆயதபாணியாய் பதினெட்டுவகை மேளவாத்தியங்களுடனே, அநேக தீவட்டியுடனே கேளிக்கையுடன் துரையவர்கள் (திருமலை நாயக்கன்) செங்ககோல் வாங்க கோயிலுக்கு வருகிற வைபவம் எழுதி முடியாது. (கி. பழனியப்பன், மதுரை சுந்தரேஸ்வரர் ஆலய மகாகும்பாபிஷேக மலர்).
மேலும் நாயக்கன் தளபதி இராமப்பையன் மறவ நாட்டின் மீது படை எடுக்கப் புறப்படும்போது, பதினெட்டு மேளம் முழங்குவது பற்றி இராமப்பையன் அம்மானையில் கண்டுள்ளதாவது:-
“குதிரை மேல் டமாரம் குமுகுமு என்றுதான் முழங்க 
பதினெட்டு மேளவகை பண்புடனே தான் முழங்க 
ஆயிரம் பல்லக்கு அதிவீரர் சூழ்ந்து வர”
(இராமப்பையன் அம்மானை, Government Oriental Series பக். 15)


அடுத்து வில்லியம் டெய்லர் சேகரித்த வரலாறு பற்றிய கைப்பிரதி யிலும், பதினெட்டு மேளம் பற்றி அடியிற் காணும் குறிப்புகள் உள்ளது.

"ஆசார முகப்பு சானனியபாகத்தி இப்போதுயிருக்கிற செச்சையுடனே கூட பத்துத் தூண் நட்டுயிருக்கிறதுக்கும் கிழக்கு பெரிய ஆசார முகப்புஆகியிருந்தயிடம் அந்த மாடத்தில் பதினெட்டு விதமான வாத்திய கோஷம்" (Mackenzie Collections : William Taylor. Oriental Manuscript Part II Page 156).
ஏற்கனவே கூறியபடி மள்ளர் - பள்ளர் தேவேந்திர குலத்தார் மூவேந்தர் மரபினர் என்பதால் நன்மைக்கு இவர் பதினெட்டு வகை மேள, வாத்தியங்கள் உபயோகிக்கும் உரிமையைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வழங்கியதாக கரிவலம்வந்த நல்லூர், சீவிலிபுத்தூர் கல்வெட்டுகள் கூறுவது நாம் அறிந்ததே. இந்த உரிமைகளை, இம்மரபினர் பண்டு தொட்டு அனுபவித்துவருகின்றனர் என்பது. இவரது மணவிழாவில் மணமக்கள் பட்டினப்பிரவேச ஊர்வலத்தின் போது அவர்கள் பதினெட்டு மேளம் முழங்கப் பவனி வருவதாக வாழ்த்தி வருவதிலிருந்து புலனாகும்.
பஞ்சவன் விருது :
பாண்டிய மன்னருக்குத் தென்னவன், மாறன், வழுதி, செழியன், மீனவன், கெளரியன், வர்மன் என்ற பல விருதுப்பெயர்களுடன் பஞ்சவன் என்ற பெயரும் வழங்கியுள்ளது. பஞ்சவன் என்பதற்கு ஐந்து பாண்டிய மன்னர் கூட்டாக, ஆட்சி செய்ததாக ஒரு சாரார் கூறுவர். பாண்டியநாடு ஐந்து தினை நிலங்களை உடையதென்றும், ஐந்து ഖகை நிலங்களை ஆட்சி செய்தவர் பஞ்சவர் என வழங்கினர் என்றும் கூறுவாருமுண்டு. ஆனால், ஒரே காலத்தில் ஐந்து பாண்டிய மன்னர் ஆட்சி செய்தனர் என்பதற்கு சங்க இலக்கியங்களிலிருந்து ஒருவரும் சான்று காட்டவில்லை. அதே போன்று பாண்டிய நாடு ஐந்து வகை நிலங்களை உடையதென்பதுவும் ஏற்புடைத்தக்கதன்று. பாண்டிய நாட்டில் ஏன்? தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்குவித நிலங்கள் தான் உண்டு எனத்தொல்காப்பியம் கூறும். சிலர் பாலை என்ற ஒரு நிலமும் இருந்தது என்பர். இது தவறு. பாண்டியரைப் பஞ்சவன் என்று கூறும் போழ்து, அவரைக் கெளரியர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. "ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” எனச் சேரமான் பெருஞ்சோற்று
உதியன் சேரலாதனைப் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் சங்க காலப்புலவர் பாடியிருப்பதுவும் (புறம் 2 – 15 - 16) பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி “தவிரா ஈகை கெளரியர் மருக” (புறம் - 315) எனவும், “பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி” “செருமான் பஞ்சவன் ஏறே” (புறம் – 58 / 8,) எனவும் பேசப்படுவதை ஒப்பு நோக்குக. பஞ்சவன் என்பது பஞ்சபாண்டவர் என்றும், கெளரியர் என்பது துரியோதனாதியார் என்றும் பொருள் படுவதாயுள்ளது. எனவே பாண்டியரை, இவர் இருவருடன் தொடர்புடையவராக நாம் கருதவேண்டியுள்ளோம். பாண்டியன் என்பது பண்டையோன், பழையோன் என்ற சொற்களிலிருந்தும், பாண்டு எருது என்ற சொல்லிலிருந்தும் பிறந்ததென்று கூறுவாறுமுளர்.

பாண்டியன் முதன்முதல் எருது கொண்டு நிலத்தை உழுததால் பாண்டியன் என்ற பெயர் தோன்றியதென்பாரும் இல்லாமல் இல்லை. எனவே பஞ்சவன் என்பதை கற்பனை என ஒதுக்கி விடுவதற்கன்று. நிற்க, ஏற்கனவே கூறியதுபோல், பஞ்சவன் என்ற விருதைப் புராண காலப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி தேவேந்திரகுலத்தாருக்குப் புராண காலத்திலேயே வழங்கியுள்ளான் என்பது கரிவலம்வந்த நல்லூர், (ARE 342 / 1914) சீவிலிபுத்துர் (ARE 588 / 1926) கல்வெட்டுகளிலிருந்து நாம் அறிகிறோம். தேவேந்திர குலத்தார் இராசாக்கள் கோயில்களை வழிபடுவதுவும், அக்கோயில்களில் திருவிழாவின் போது பாரதபபோர் நடிக்கப்பட்டு வருவதும் சிந்தனைக்குறியவை ஆகும்.
நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூர் மேட்டில் உள்ள இராசாக்கள் கோயிலில், பாண்டவர், கெளரியர் பீடங்கள் இருப்பதும், ஆதிச்சநல்லூருக்குத் தெற்கில் உள்ள புளியங்குளம் வேந்திரகுலத்தார் இக்கோயிலில் வழிபாடு நடத்திவருவதுவும், இம்மரபினர் பாண்டவர், கெளரியருடன் தொடர்புடையவர் என்பதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. ஆதிச்சநல்லூருக்கு அண்மையில் உள்ள செம்பூர், வரதராசபுரம், புதுக்குடி என்ற ஊர்களிலும் தேவேந்திர குலத்தார் குடியிருப்புகளில் இராசாக்கள் கோயில்கள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது ஆம். மேலும் தேவேந்திரகுலத்தார் மணவிழாவில் மணமக்களைப் பஞ்சபாண்ட வரோடு இணைத்து வாழ்த்துவதும், அருச்சுனன் பாண்டியன் மகளாகிய அல்லி அரசாணியை மணக்கும் கதை பாத்திரத்திலேயே பேசப்படுவது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அல்லி அரசாணி மாலையில் அருச்சுனனைக், கிருஷ்ணன் “குடும்பா நீ” என அழைப்பதவும் நினைவிருக்கத்தக்க ஒன்றாகும். நிற்க பாண்டியரைப் பஞ்ச திராவிட முதல்வன் எனத் திருமணங்களில் வாழ்த்துவதுண்டு, 'திராவிடம் என்பது குஜராத்து, மராட்டா, கர்நாடகம், தெலுங்கு, தமிழ் ஆகிய ஐந்து மொழிபேசப்படும் நாடுகளை சுட்டும் மனோன்மணியம் சுந்திரம்பிள்ளை கன்னடமும், களி, தெலுங்கும் கவின் மலையாளமும் உன் உதிரத்தே எழுந்தது என்று பாடியுள்ளது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதி திராவிடம் என வழங்கியது. தேசிய கீதத்தில் திராவிட உத்சல வங்கா என வருவது காண்க. சிந்து வெளியிலிருந்து மேற்குக் கரையோரம் திராவிடர் தெற்கே குடியேறியதை இது உணர்த்துகிறது இருத்துகிறது எனலாம். மல்லர் / மள்ளர் பாரதப் போரில் பங்குகொண்டது வியாசர் பாரதத்திலிருந்து அறியலாம். அவரை வியாசர் தட்சண மல்லர் எனக் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

No comments:

Post a Comment