Saturday, November 25, 2017

மூவேந்தர் யார்? பகுதி-34

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

குலப்பட்டங்கள்
தமிழகத்தில் இன்று ஒவ்வொருவகுப்பினருக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குலப் பட்டங்கள் வழக்கில் இருந்து வருகின்றன. ஒரே குலப்பட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்பினர் பூண்டு வருவதையும் நாம் அறிவோம். ஒருவர் மரபைத் தெரிந்துகொள்ள முதன் முதல் அவரது குலப்பட்டத்தைத்தான் வினவுவர். அப்பட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்பாருடையதாய் இருப்பின், அடுத்து அவரது மரபைக் கேட்பர்.
இன்று சமூகத்தில் உயர்வாகக் கருதப்படும் குலப்பட்டங்கள் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, முதலியார், பிள்ளை, செட்டியார் ஆகும். எல்லா சமூகத்தாராலும் உயர்வாக்க் கருதப்படவும், வாழ்க்கையில் முன்னேறவும் இப்பட்டங்களில் ஒன்றை ஒருவர் தரித்திருப்பது இன்றியமையாத ஒன்றாகின்றது.
அய்யர் என்ற பட்டம் இன்றையப் பார்ப்பனர் தவிர்த்து, பட்டு நூல் நெசவாளரும் தரித்து வருகின்றனர். தேவேந்திர குலத்தார் குருக்களுக்கும், தென் இந்திய கிருத்துவசபைக் குருக்களுக்கும் அது தொழிலை உணர்த்தும் பட்டமாக அமைந்துள்ளது.
அதே போன்று முதலியார், பிள்ளை, கவுண்டர், தேவர், சேர்வை, மூப்பன், அம்பலகாரர், என்ற பட்டங்களை ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்பார் பூண்டு வருகின்றனர். எனவே இக்குலப்பட்டங்களைக் கொண்டு ஒருவரின் வகுப்பை சுலபமாய்த் தெரிந்து கொள்ள இயலாது. தமிழகத்தில் வாழும் சில வகுப்பினரின் இன்றையக் குலப்பட்டங்களைக் கீழே காண்போம்.
அகம்படியார்
பாண்டிநாடு 
- அகம்படியன், சேர்வை, தேவர்,
சோழநாடு 
- தேவர், பல்லவராயன், பிள்ளை
தொண்டைநாடு 
- முதலியார், உடையார்


அம்பலகாரர், வலைஞர், முத்திரியர் 
- அம்பலகாரன், சேர்வை, மழவராயன், மூப்பன், பிள்ளை, வன்னியன்,


இசைவேளாளர், தேவரடியார், மேளக்காரர்

வடமாவட்டங்கள் 
- முதலியார். 
தென்மாவட்டங்கள் 
- பிள்ளை.


இடையர் 
- கோனார், கரையாளர், சேர்வை, மணியக்காரர், மன்றாடி, முக்குந்தன், பிள்ளை.


இலைவாணியர், இல்லத்துப் பிள்ளைமார், ஈழவர்
- பணிக்கன், பிள்ளை, மூப்பனார்


கம்மாளர் 
- ஆசாரி, ஆச்சாரி, நயினார், பத்தர்.


கள்ளர்:
- பாண்டிநாடு பிறமலைக் கள்ளர் - தேவர். 
- ஈசநாட்டுக்கள்ளர், மேலூர் கள்ளர் - அம்பலகாரர்,


வெள்ளூர்க்கள்ளர்
- உறங்காப்புலி, சம்மட்டி மக்கள், சாயும் படைதாங்கி, சாமிப்புலி, செம்புலி, திருமான், பூலான், முன்டேர்சி, மழவராயன், வெக்காலிப்புலி, வேங்கைப்புலி, ரெக்கான்.

சோழநாடு 
- அம்பலகாரர், கவுண்டர், களங்காப்புலி, சிங்கராயன், சோழகர், தஞ்சைராயர், தென்கொண்டார், தேவர், மழவராயர், முதலியார், வன்னியர், காடுவெட்டி மண்கொண்டார், மூவராயர், தொண்டைமான், நாட்டார், நாயக்கர் வாண்டையார், ராசாளியார் என நூற்றுக்கு மேற்பட்ட குலப்பட்டங்கள் வழங்கிவருகின்றன.


கிராமணி, சாணார்
- கிராமணி, சாணார், சேர்வை, நாடார், நாடாவி, முக்குந்தன், மூப்பன்.


குயவர்
- வேளார், செட்டி, மன்னுடையார், உடையார், பிள்ளை.


சாலியர் 
- அடவியர்


செட்டியார்
- ஆரியவைசிய செட்டியார், காசுக்காரர் செட்டியார், கரையான் செட்டியார் கோமுட்டி செட்டியார், சோழியன் செட்டியார் நாட்டுக்கோட்டை செட்டியார், பனிரெண்டாம் பேரி செட்டியார், மஞ்சக்குப்பம் செட்டியார் மளிகை செட்டியார், வாணியன் செட்டியார், வெள்ளான் செட்டியார்


செம்படவர் 
- நாட்டார், கவுண்டர், பிள்ளை, மணியக்காரன்.


சேனைக்குடையார் 
- செட்டியார், முதலியார், பிள்ளை, சேனைத்தலைவர்


செளராஸ்ட்ரப் 
- அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, பட்டு நெசவாளர் சாஸ்திரி.


தேவேந்திர குலத்தார்
பாண்டிநாடு
- காலாடி, குடும்பன், பாண்டியன்
சோழநாடு
- சோழன், காலாடி, தொண்டைமான், பணிக்கன், மூப்பன், வாய்க்காரன்.
கொங்குநாடு
- குடும்பன், பட்டக்காரர், பண்ணாடி, பலகன், மண்ணாடி

நத்தமன், சுருதிமான், மலையமான்
- உடையார், மூப்பன்


பட்டணவர்
-செட்டியார், பிள்ளை, முதலியார், பரிவாரம் ஊழியக்காரன், சேர்வைகாரன், மணியக்காரன்.

பள்ளி, படையாச்சி, வன்னியர்
- அங்கராயர், கண்டர், கண்டியர், கவுண்டர், காளிங்ராயர், சம்வுவராயர், சேதுராயர், தேவராயர், நயினார், நாயக்கர், படையாச்சி, புலிகுத்தியார், மழவராயர், வன்னியர், வாண்டையார், பிள்ளை.

பறையர்
- சாம்பார், பிள்ளை.


பார்ப்பனர்
- அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, கனபாடிகள், குருக்கள், சர்மா, சாஸ்திரி, தீட்சதர், பட்டர்.

மருத்துவர், நாவிதர்
- மருத்துவன், பண்டிதன், பிள்ளை, முதலியார்.

மறவர்
- கரையாளர், சேர்வை, தலைவர், தேவர்

வண்ணார்
- ஏகாலி, பிள்ளை


வேளாளர், வெள்ளாளர்
பாண்டிநாடு
- பாண்டிய வேளாளர், காரைக்கட்டுப்பிள்ளைமார், பிள்ளை.

சோழ நாடு 
- பிள்ளை.

தொன்டை நாடு 
- முதலியார்.

கொங்கு நாடு 
- கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியர், பிள்ளை.


மேலே கண்ட குலப்பட்டங்கள் எப்போது எவ்வாறு வழக்கில் வந்தன? என்பது பற்றியும், அவைகள் உணர்த்தும் பொருள் பற்றியும்
ஈண்டு காண்போம்.

(தொடரும்)

2 comments:

  1. வாண்டையார் என்பது தேவர் இனத்தின் ஒரு பிரிவு

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete