மள்ளரிய தந்தை
இரா. தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
பள்ளர் பாராட்டும் மன்னர்க்குரிய உரிமைகள் :
மன்னர்க்கு ஏற்பட்ட உரிமைகள் அவரது மரபினர்க்கும் உண்டு என்பதற்கு “மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப” (தொல் பொருள். அகத் 32 ) என்ற மேற் கோள் சான்றாகும் என்பதை நாம் அறிவோம். மன்னர் ஆட்சி நடத்துவதற்கும் படை, கொடி, குடை, முரசு, குதிரை, களிறு தேர், தார், முடி ஆகிய ஒன்பதும் உரியவை என்பதற்கு
படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறும் தேரும்
தாரு முடியும் நேர்வயன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க் குரிய
(தொல்பொருள் மரபியல் - 72)
என்ற மேற்கோள் சான்றாகும். பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வழகப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளனவா? நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா, கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் (ARE 432 / 1914) பாண்டின் ஊக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை, வெண்வட்டக் குடை, கெராடி, பகற்பந்தம், பாவாடை, இரட்டைச் சிலம்பு, இரட்டைக் கொடுக்கு, நன்மைக்குப் பதினாறு கால் பந்தல், துன்மைக்கு இரண்டு தேர், பஞ்சவன்(பாண்டியன்) விருது, பதினெட்டு மேளம் வழங்கி அன்று தொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர். ஆனால் நாயக்கர் மதுரையில் இருந்து ஆட்சி செய்தபோது பறையர், பள்ளருக்கு (தேவேந்திர குலத்தாருக்கு) விரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். மூவேந்தரும் போரில் தோற்றதன் விளைவாய், அவரது மரபினராகிய தேவேந்திர குலத்தார் (மள்ளர் - பள்ளர்) நில உடைமை இழந்து தாழ்த்தப்பட்டுப் பண்ணை அடிமை நிலை எய்திய காலை, பறையர் இம்மரபினருக்கு ஏற்பட்டிருந்த உரிமைகள் தங்களுக்கு உண்டு எனப் பாவித்து அவற்றை நடத்திவர முற்பட்டனர்.
இதை அறிந்த தேவேந்திரகுலத்தார், பறையர் செய்கையை ஆட்சேபிக்க, இருசாரருக்கும் இடையே பகைமையும், கை கலப்பும் அடிக்கடி நிகழலானது. தேவேந்திர குலத்தார். பறையர் செய்கை பற்றி கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்து ஆட்சி செய்து வந்த திருமலை நாயக்க மன்னனிடம் முறையிட, அவன் பறையர், தேவேந்திர குலத்தார் இருதரப்பாரையும் வரவழைத்து விசாரித்து, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தேவேந்திர குலத்தாருக்கு வழங்கிய பழைய பட்டயம் பார்த்து, மேலே கண்ட உரிமைகள் எல்லாம் தேவேந்திர குலத்தாருக்கே உரியவை என்றும் பறையர் அவற்றை உபயோகிக்கக் கூடாது என்றும் தீர்ப்பளித்தான்.
மேலே கண்ட திருமலை நாயக்க மன்னன் தீர்ப்பு இராமநாதபுரம் மாவட்டம் சீவிலிபுத்துர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது காணலாம் (ARE 588 / 1926) தேவேந்திரகுலத்தாருக்கு வழங்கப்பட்ட மேலேகூறிய உரிமைகள், தமிழகத்தில் பார்ப்பனர் உட்பட இன்று உயர்சாதி எனப்பாராட்டும் வகுப்புகள் ஒன்றிற்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடைகாலத்தில் சோழர் ஆட்சியில் படைப்பிரிவுகள் வலங்கை, இடங்கை எனப் பிரிக்கப்பட்டிருந்ததாக வரலாறு. கூறும்_நாயக்கர் காலத்தில் இதில் மாற்றம் ஏற்பட்டதாகத தெரிகிறது. சோழர் காலத்தில் இடங்கையினர்தான் படையில் பிரதான இடம் வகித்தனர். என, K.A. நீலகண்ட சாஸ்திரி கூறுவார். அவர் கூறுவதாவது : இலங்கையில் பொலன்னுறுவாவில் இருக்கும் விஜயபாகுவின் கல்வெட்டில் இடங்கை வேளக்காரர் பற்றி குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளக்காரர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள் என்ற குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சரியான கருத்தாக தோன்ற வில்லை. மாறாக இவர்கள் நிரந்தரமான நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகர்களாகப் பணிபுரிந்தனர். பெயருக்கேற்ப வேளைவரும்போது இவர்கள் உயிரைக் கொடுத்து அரசைக் காப்பாற்றினர் என்று தான் கருதவேண்டும். சோழர்படையில் காலாட்படையின் பல பகுதிகளைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. கைக்கோளரைக் கொண்ட படைப்பிரிவு கைக்கோளர் பெரும்படை என்று அழைக்கப்பட்டது. கைக்கோளர் என்றால் நெசவாளரைக் குறிக்கும் சொல்லாகக் கொண்ட படைப்பிரிவைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருத்தமாகும். வில்லேந்திய வீரர்கள் வில்லிகள் என்றும், வாளேந்திய வீரர்கள் வாள் பெற்ற கைகோளர்கள் என்றும் குறிக்கப்படுகின்றனர் (K.A. நீலகண்டசாஸ்திரி - சோழர்கள் 1989 பக், 619 - 20).
இடங்கை வேளக்காரப் படையினர் என சோழர் காலத்தில் பேசப்படுபவர் பொதுவாய்த் தேவேந்திரகுலத்தாரே ஆவர். இன்று கைக்கோளர், செங்குந்தர் எனக் கூறுபவர் அதில் அடங்கார். இவர் படை மறவர் அன்று மாறாக இவர் நெசவுத் தொழில் செய்து வந்தவர். இவர்கள் விசய நகர மன்னர் ஆட்சியில் இந்து ஆலயங்களைச் சுற்றியுள்ள மடவிளாகங்களில் குடி அமர்த்தப்பட்டு ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களுக்குப் புதுத்துணிவழங்கப் பணிக்கப்பட்டவர் ஆவர். இவரது ஒவ்வொரு குடும்பத்திலிமிருந்தும் ஒரு பெண்ணை ஆலயங்களில் பணிசெய்யப் பொட்டுக்கட்டி தேவகணிகையாக நியமனம் செய்தனர். இவர் வழிவந்தோர் ஆலயங்களில் மேளம் வாசித்தல், கணக்கு எழுதல் மற்றும் பணிகள் செய்யப் பணிக்கப்பட்டனர். இன்று சேனைக் குடையான், சேனைத் தலைவர் என்று கூறிவரும் வகுப்பினரும் வேளக்காரப் படையில் ஈடுபட்டதாகக் தெரியவில்லை. இவர் நாயக்கர் குதிரைப்படைச் சேவகர் என்று கருத வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே குதிரைக்குப் புல் பொருக்கிப் போடும் பறையர் இருந்தனர்.
இவரும் குதிரைப் பராமரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இவர் பறையருள் ஒரு பிரிவினராகிய கோலியராய் இருக்கலாம். தெலுங்கரோடு வந்த குதிரைச் சேவகர் தம்மைச் சேனைக்குடையான், சேனைத் தலைவர் என்றும், பறையரில் குதிரைப் பராமரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட கோலியர் தம்மை இன்னாளில் வாதிரி என்றும் நெல்லை மாவட்டத்தில் அழைத்துக் கொள்கின்றனர் எனலாம்.
இவர் சோழர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தபோது குதிரை வீரரோடு குதிரை பராமரிப்புக்காகச் சோழநாட்டிலிருந்து குடியேற்றப் பட்டதாகக் கூறுவர் (நட்டாத்தியர் வரலாறு இரா. தேவ ஆசீர்வாதம் வேளாளர் யார்? பக். 192 - 93). இந்த இரு பிரிவினரும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சேனைக் குடையான் சேனைத் தலைவர் இல்லங்களில் பறையர் உணவு உட்கொள்வதில்லை. அவரது கால்நடைகள் இறந்தால் அவற்றைப் பறையர் தூக்குவதும் இல்லை. நாவிதரும் இவருக்கு முடிதிருத்துவது இல்லை. இவர் சிறிது காலத்திற்கு முன்னர் கொடிக்கால்காரர் என்றும், இலை வாணியர் என்றும் வழங்கி வந்தனர். பின்னாளில் குல உயர்வு கருதி சேனைக்குடையான், சேனைத் தலைவர் எனப் பெயரை மேற்கொண்டனர் [E. Thurston, Castes and Tribes of South India, Vol. V]
அக்காலத்தில் இந்த வலங்கை இடங்கை பிரிவினர்க்கு இடையே அரசு வழங்கிய உரிமைகள் உபயோகம் பற்றி அடிக்கடி சச்சரவுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு பிரிவினர் மற்றப் பிரிவினர்க்கு உரிய உரிமைகள் தங்களுக்கு உண்டு எனப் பாவித்து அவற்றை நடத்த எத்தனிக்கும்போது, இரு சாராருக்கும் இடையே கைகலப்புகள் ஏற்பட்டன. கரிவலம் வந்த நல்லூர், சீவிலிபுத்துர் ஆலயங்களிலுள்ள கல்வெட்டுகளில் பேசப்படும் தேவேந்திர குலத்தார் - பறையர் சச்சரவு இத்தகையதே.
(தொடரும்)
http://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010791_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf
ReplyDeleteதவரான தகவல்
ReplyDelete